இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு

சென்னை, மார்ச் 29- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் 23ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு மார்ச் 30,  31, ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாள்களில் மதுரையில், இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற உள்ளது.

 இம்மாநாட்டில் தமிழ்நாடு  முழுவதிலிருந்து 500க்கும் மேற் பட்ட பிரதிநிதகள் கலந்து கொள் கின்றனர். இம்மாநாட்டையொட்டி மார்ச் 29.03.2022 இன்று மாலை 4.00 மணிக்கு செங்கொடி இயக்க வர லாற்று படக் காட்சியை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் தோழர் எம்.ஏ.பேபி திறந்து வைக்கிறார்.

நாளை 30.03.2022 அன்று காலை மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கு கின்றன. மாநாட்டுக் கொடியை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் ஏற்றி வைக்கிறார். அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுகிறார். 

நாளை மாலை 4.00 மணிக்கு மதுரை காளவாசலில் இருந்து பத் தாயிரத்திற்கும் மேற்பட்ட செந் தொண்டர்களின் அணிவகுப்பு துவங்குகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு) உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பழங்காநத்தம் ஜெபம் திரையரங்கு அருகில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை திரைக்கலைஞர் ரோகிணி துவக்கி வைக்கிறார். பொதுக் கூட்டத்தில் அகில' இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தா ராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் தோழர்  ஜி.ராமகிருஷ்ணன், மாநில செய லாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் அ.சவுந்தரராசன், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப் பினர் தோழர் மதுக் கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப் பினரும், மக்களவை உறுப்பினருமான தோழர் சு.வெங்கடேசன்  ஆகி யோர் சிறப்புரையாற்றவுள்ளனர். 

No comments:

Post a Comment