உஜ்ஜைனி, ஜன. 21- மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயிலில் ஒன்றாக பயணம் செய்த முஸ்லிம் ஆண் மற்றும் இந்துப் பெண்மீது பஜ்ரங் தள் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ள னர். மேலும், ஏதோ குற்றவாளிகளைப் போல அவர்களை ரயிலிலிருந்து இறக்கி விட்டு, காவல் நிலையத்திற் கும் இழுத் துச் சென்றுள்ளனர். மத் தியப் பிரதேச மாநிலத் தில், அஜ்மீர் செல்லும் ரயில் பெட்டியில் ஒரு முஸ்லிம் ஆணும், திரு மணமான இந்துப் பெண் ணும் பேசிக் கொண்டே பயணம் செய்ததாக கூறப் படுகிறது. அப்போது அங்கு வந்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் இருவரின் விவரங்களையும் விசா ரித்து, அவர்களாகவே காதலர்கள் என்று முத் திரை குத்தி, தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களை வலுக்காட் டாயமாக ரயிலிலிருந்து இறக்கிவிட்டு, ‘லவ் ஜிகாத்’ குற்றச்சாட்டை முன்வைத்து உஜ்ஜைனி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப் படைத்துள்ளனர்.
விசாரணையில், அந்த முஸ்லிம் ஆண், சிறிய எலக்ட்ரானிக் கடை யின் உரிமையாளர் ஆசிப் ஷேக் எனவும், அந்தப் பெண் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களை பெற்றோர் மற்றும் குடும் பத்தினர் வரும்வரை காவல் நிலையத்தி லேயே அமர வைத்துள்ளனர். ஜனவரி 14 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும் இது தொடர் பான காணொலிக் காட் சிப்பதிவு வெளியான பிறகே, நடந்த உண்மை கள் தற்போது வெளிச்சத் திற்கு வந்துள்ளது.
பஜ்ரங் தள் தொண்டர் கள் என அடையாளப் படுத்திக் கொண்ட மூன்று பேர், இளைஞர் ஷேக்-கை ரயில் பெட் டியில் இருந்து வெளியே இழுப்பதும், காவல் நிலை யத்திற்குள் பதிவான மற் றொரு காட்சிப்பதிவில், சம்பந்தப்பட்ட இந்துப் பெண், “உங்கள் ஒரு தவ றான புரிதல் என் வாழ்க் கையை கெடுத்துவிடும். நான் ஒரு வயது வந்தவள். நான் ஒரு பள்ளியில் ஆசிரி யராக வேலை செய்கி றேன். நான் குழந்தைக ளுக்கு கற்பிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்” என்று கதறுவதும் பதி வாகியுள்ளது.
No comments:
Post a Comment