திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு!
சென்னை,ஜன.21- குடியரசு நாள் அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதற்கு ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செய லாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது:
இந்தியவிடுதலையின் பவள விழாவை முன் னிட்டு, எதிர்வரும் சனவரி 26 - குடியரசு நாளில், புதுடில்லியில் நடைபெறும் அலங்கார அணி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது.
மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக் கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், விடுதலைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் அணிவகுப்பை, ஒன்றிய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்துவிட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ் நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர் களும் ஒன்றிணைந்து எழுப்பிய கண்டனக் குரலை டில்லி அரசு முரட்டுத் தனமாக ஏற்கமறுத்துவிட்டது.
பலமுறை இதுகுறித்து எடுத்து விளக்கிய பின்பும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும், கூட்டாட்சி நெறிமுறைகளை குழி தோண்டி புதைக்கும்வகையிலும் மோடி அரசு முடிவெடுத்து செயல்படுவது, வன்மையான கண் டனத்திற்கு உரியதாகும்!
டில்லி அரசு அனுமதிக்க மறுத்த ஊர்திகள், தமிழ்நாடு அரசு நடத்தும் குடியரசு நாள் அணி வகுப்பில் இடம் பெறும் என்று முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்அவர்கள் அறிவித்த பின் பும், ஒன்றிய அரசு மாநில உணர்வுகளை மதிக்கத் தயாராக இல்லை என்பது தெரிந்துவிட்டது.
குடியரசு நாள் விழாஊர்வலத்தில், தமிழ்நாட்டு மக்களையும் மக்களாட்சி பண்புகளையும் இழிவு செய்யும், ஒன் றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கி னைக்கண்டித்து, சனவரி 26 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்து மாறு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளதை மறுமலர்ச்சிதி.மு.கழகம் வரவேற்கிறது; பாராட்டுகிறது!
அனைத்துக் கட்சி அலுவலகங்கள் முன்பும், வீடுகளின் முன்பும் தனி நபர் இடைவெளிவிட்டு, அமைதி வழியில் கண்டன குரல் எழுப்பிடுமாறு தமிழ் மக்கள்அனைவரையும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment