தஞ்சையில் தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைகள் திறப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

தஞ்சையில் தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைகள் திறப்பு விழா

தி.மு.. தலைவர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூர்,டிச.30- தஞ்சாவூர் மாவட்ட தி.மு.. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது சிலைகளை நேற்று (29.12.2021) தி.மு.. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விழாவுக்கு சாலைவழியே சென்ற முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் கூடி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். விழாவில் தி.மு.. தலைவர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்ட திமுக சார்பில் வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது. மாவட்ட தி.மு.. அலுவலக குறிப்பேட்டில் வருகையை பதிவுசெய்தார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்.

விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் .பொன்முடி, சட்டத் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி .கே.எஸ்.விஜயன், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment