வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்மசோதா - குடியரசுத் தலைவர் ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்மசோதா - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுடில்லி, டிச. 3- புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வகையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப் பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (2.12.2021) ஒப்புதல் அளித்தார்.

விவசாயிகளின் வருமா னத்தை பெருக்குவதாக கூறி ஒன்றிய அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப் பையும் மீறி நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மசோதாக்கள் நிறைவேற் றப்பட்டன.

ஆனால், இந்த புதிய வேளாண் சட்டங்கள் முழுக்க முழுக்க தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். எனினும், இந்த விவகாரத்தில் விவசாயிக ளின் குரலுக்கு அரசு செவிமடுக் கவில்லை.

இதன் தொடர்ச்சியாக, இச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் டில்லியில் விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்வதற்கு சில தினங் களுக்கு முன்பு, தொலைக் காட் சியில் தோன்றிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். மேலும், டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்புமாறும் அவர் கேட்டுக் கெண்டார்.

ஆனால், இதனை ஏற்காத விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத் தில் முறைப்படி திரும்பப் பெற வேண்டும் என்றனர். போராட் டத்தின் போது உயிரிழந்த

700-க்கும் மேற்பட்ட விவசாயி களின் குடும்பத்தினருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்ய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என் பது உட்பட பல்வேறு கோரிக் கைகளை விவசாய சங்கத் தலை வர் ராகேஷ் டிகைத் முன் வைத்தார்.

அதற்கு பதில் அளித்த ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் தோமர், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்க ளுக்கு நட்டஈடு வழங்கும் விவ காரம் மாநில அரசு அதிகாரத் துக்கு உட்பட்டது. இதில் சம் பந்தப்பட்ட மாநிலங்கள் நட வடிக்கை எடுக்கும் என்றார்.

இதையடுத்து, கடந்த 29ஆம் தேதிகூடிய நாடாளு மன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல்நாளிலேயே, வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாஇரு அவைகளிலும் நிறை வேற்றப் பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் புதிய வேளாண் சட்டங்கள் அதி காரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment