குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 14, 2021

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி, நவ.14 தமிழ்நாட்டில்வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.

தென்காசி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை , கடையம், பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று காலை பெய்த கனமழையால் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை கடந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  இதேபோல் பழைய குற்றால அருவி, அய்ந்தருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment