கிளாஸ்கோ, நவ. 3- நமது சவக் குழியை நாமே தோண்டிக் கொண்டு இருக்கிறோம் என்று கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் அய்.நா. பொதுச் செய லாளர் அன்டோனியோ குட் டெர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பருவநிலை மாற்றம் குறித்த அய்.நாவின் 26ஆவது உச்சி மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
முதல்நாள் கூட்டத்தில் பேசிய அய்.நா. பொதுச் செயலாளர் அன் டோனியோ குட்டெர்ஸ், புகை வடிவ எரிபொருட்களுக்கு அடி மையாகி இருப்பதன் மூலம் நமது சவக்குழியை நாமே தோண்டிக் கொண்டு இருக்கிறோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நிலத்தை தோண்டி எரிபொருள் எடுப்பதை நிறுத்தாவிட்டால் அது நம்மை நிறுத்திவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். எரிபொரு ளுக்காக ஆழமாக நாம் பூமியை தோண்டிக் கொண்டே இருந்தால் நமது சவக்குழியை நாமே தோண்டு கிறோம் என்று பொருள் எனவும் அன்டோனியோ குட்டெர்ஸ் குறிப்பிட்டார்.
மாநாடு நடைபெறும் அரங் கிற்கு வெளியே உரையாற்றிய இளம் சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தென்பெர்க், 'அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகள் நமது எதிர்காலத்தை சீரியசாக எடுத்துக் கொள்வது போல் பாசாங்கு செய்கிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
No comments:
Post a Comment