பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரோடு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட விராட் கோலியின் 9 மாதக்குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததன் பேரில் ராம் நாகேஷ் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது ராம் நாகேஷ் தவறுதலாக பதிவிட்டார் என்று கூறி நீதிமன்றம் குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்து விட்டது,
இசுலாமிய வணிகருக்கு அநீதி
இந்துப் பெண்களின் கையைப் பிடித்து வளையல் அணிவித்தார் - என்று குற்றம்சாட்டி இந்துத்துவ அமைப்பினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட இசுலாமிய வளையல் வணிகர் மீது - இரண்டு சமூகத்திற்கு இடையே மோதலை தூண்டும் விதமாக செயல்பட்டார், பிற மதநம்பிக்கையை இழிவு படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 3 மாதம் ஆகியும் இன்றுவரை பிணையும் கிடைக்கவில்லை, குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஊர் ஊராக சென்று வணிகம் செய்துவரும் அவரது 3 குழந்தைகளும் மனைவியும் வாழவழியின்றி மசூதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment