ஈரோடு மண்டல திரா விடர் கழகத் தலைவர் ப. பிரகலாதன் (வயது 66) நேற்று (8.11.2021) நள்ளிரவு 12 மணியளவில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை அறி விக்க வருந்துகிறோம். அவர் 45 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரும் பணியாற்றியுள்ளார். குருவாரெட்டியூர் என்ற சிற்றூரில் தந்தை பெரியார் (2009இல்) வெண்கல சிலை வைக்க முழுக் காரணமாக இருந்தவர். ஒரே தலைமை, ஒரே கொள்கை, ஒரே கொடியின் கீழ் என்று வாழ்ந்தவர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை ஊரே திரண்டு நிற்கும் அளவுக்கு ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வந்தவர் - ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பொது நலத் தொண்டர் ஆவார்.
5.11.2021 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்திலும்கூட கலந்துகொண்டார். அவரது அடக்கமான இயக்கத் தொண்டினை நினைவு கூர்ந்து, வீர வணக்கம் செலுத்துகிறோம். அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியுள்ள குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிடர் கழகம்
9-11-2021
குறிப்பு: நாளை காலை 10 மணிக்கு குருவாரெட்டியூரில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பங்கேற்று மானமிகு பிரகலாதன் உருவப் படத்தினைத் திறந்து வைப்பார்.
No comments:
Post a Comment