மனித குல வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் காலடித் தடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 23, 2021

மனித குல வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் காலடித் தடங்கள்

கிரேக்க தீவான கிரீட்டில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட காலடித் தடங்களின் தொகுப்பு, மனித இனத்தின் தோற்றம் குறித்த வியப்பான கேள்விகளையும் - பெரும் விவாதங்களையும் எழுப்புகிறது.

ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள் என்று அறியப்படும் இந்த தடங்களை போலந்து புதைபடிவ ஆராய்ச்சியாளர் ஜெரார்ட் ஜியர்லின்ஸ்கி 2002ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ஆனால், அவை இந்த வகையான மனித மூதாதையர்களின் பழைமையான சான்று என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

அக்டோபர் 11ஆம் தேதியன்று ஒரு பன்னாட்டு குழுவால்சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, ஹோமினின்கள் (நவீன மனிதர்கள், அழிந்துபோன மனித இனங்கள் மற்றும் நமது உடனடி மூதாதையர்கள் அடங்கிய குழுவை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல்) வேறு எங்கும் தோன்றுவதற்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றி, பரிணாம வளர்ச்சி அடைந்தனர் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டிற்கு சவால் விடுக்கிறது.மனிதகுலத்தின் தொட்டில்ஆப்ரிக்காவே என்ற கருதுகோளை புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் பரவலாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த கோட்பாட்டின்படி, இரண்டுலட்சம் ஆண்டுகளுக்கு குறைவான காலத்தில், உலகின் பிற பகுதிகளுக்கு நடந்தபெரும் இடப்பெயர்வுக்கு முன் மனிதகுலம் ஆப்பிரிக்க  கண்டத்தில் மட்டுமே உருவானது.

ஆனால், சுவீடனின் புதைவடிவ ஆராய்ச்சியாளர் பெர் அஹல்பெர்க் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த காலவரிசைக்கு சவால் விடுகிறது: ட்ராச்சிலோஸ் காலடித்தடம் ஆறு மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என அவர்கள் கூறுகின்றனர்.

1976 ஆம் ஆண்டில் தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட லாடோலி கால்தடங்கள் - நடக்க பயன்படுத்தப்பட்ட மனிதனைப் போன்ற பாதத்தின் முதன்மையான நேரடி சான்று என்று கருதப்படுவதை விட, கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஆண்டுகள் பழைமையான தடங்களாக இது இருக்கும்.

காலடித் தடங்களைப் போல, கடந்த 100 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் மனிதனுக்கு முந்தைய புதைபடிவ கண்டுபிடிப்புகள் பலவும் உள்ளன. இதில் ஏழு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததாக கருதப்படும் சஹேலாந்த்ரோபஸின் (Sahelanthropus)  மண்டை ஓடும் அடங்கும்; தற்போது அறியப்படும் மிகப் பழைமையான ஹோமினின் இதுவாகும்.

ஒப்பீட்டு அளவில், அய்ரோப்பாவில் இதுபோன்ற எலும்பு படிமங்களின் கண்டுபிடிப்புகள் மிகக் குறைவு.பெர் அஹ்ல்பெர்க், 2017 ஆம் ஆண்டில் ட்ராச்சிலோஸ் காலடித் தடம் பற்றிய முதல் அறிக்கையை வெளியிட்ட குழுவில் ஒருவராக இருந்தார். அக்டோபர் 2021இல் நடத்தப்பட்ட ஆய்வில், அவற்றின் வயது 5.7 மில்லியன் ஆண்டுகளில் இருந்து 6.05 மில்லியனாக மாற்றியமைத்து அச்சிடப்பட்ட புவியியல் பகுப்பாய்வு என்கிற ஆய்வு.

அஹ்ல்பெர்க் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள், அந்த காலடித் தடம் கொரில்லாக்கள் மற்றும் சிம்பன்சிகள் போன்ற விலங்குகளின் காலடிகளைப் போல் இல்லாமல், ஹாலிக்ஸ் (பெருவிரல்) மற்ற விரல்களுக்கு நெருக்கமாகத் தோன்றும் வகையில், ஹோமினின் காலடித் தடங்களை ஒத்திருப்பதாக தங்கள் ஆய்வில் முடிவு செய்தனர்.

மனிதரல்லாத குரங்கின் காலடித் தடங்கள் மிகவும் வித்தியாசமாகத் தெரிகின்றன; அதன் கால் ஒரு மனிதக் கையைப் போன்ற வடிவத்தில் உள்ளது, பெருவிரல் கால்விரலின் பக்கவாட்டில் தாழ்வாக இணைக்கப்பட்டு ஒட்டிக்கொண்டுள்ளதுஎன்று அவர்   கூறினார்.

நம் சக விலங்குகளுடன் ஒப்பிடுகையில், நம் பெருவிரல்கள் பாதத்தின் நீண்ட அச்சிற்கு ஏற்ப உள்ளன - அவை ஒரு பக்கமாக துருத்திக் கொண்டு இல்லை.”

ஆனால், சில புதைபடிவ ஆராய்ச்சியாளர்களால் இக்கண்டுபிடிப்புகள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது.

ஆய்வாளர்கள் தடங்களை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் முறைகளைக் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், சிலர் அவை உண்மையான கால்தடங்களா என்று கூடக் கேட்டனர். இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி காலடித் தட நிபுணர் பேராசிரியர் மேத்யூ பென்னட், கிரீசில் உள்ள தடங்களைப் படிக்கும் குழுவில் ஒருவராக இருந்தார். ஆனால் அவரும் அவரது மதிப்பீட்டில் எச்சரிக்கையாக இருக்கிறார்.

அவை மிகவும் புதிரான ஆர்வத்தைத் தூண்டக் கூடிய புதைபடிவ காலடித் தடங்கள்; அநேகமாக ஒரு இரு கால்களைக் கொண்டு நடக்கும் விலங்கின் தடமாக இருக்கலாம், சில வகையான மனிதக் குரங்குகளாக இருக்கலாம்என பேராசிரியர் பென்னட் பிபிசியிடம் விளக்கினார்.”காலடித் தடங்கள் மனித மரபுவழி வந்தவை என்றால் அது மற்றொரு கதை.”

பென்னட்டின் தயக்கத்தை புரிந்து கொள்ள, அய்ரோப்பாவில் ஒரு ஹோமினின் புதைபடிவ எலும்பு கூட இல்லாததை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், மனித பரிணாமத்தின் காலவரிசை ஒரு எளிய விவகாரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

பெரிய மனிதக் குரங்குகள் - ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள், சிம்பன்ஸிகள் மற்றும் மனிதர்கள் - தோராயமாக 23 மில்லியன் முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மியோசீன் என்று அறியப்பட்ட காலத்தில் தோன்றி பன்முகப்பட்டதாக புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால், மனிதர்கள் எப்போது அவைகளிடமிருந்து பிரிந்து வந்தனர் என்கிற விஷயத்தில் அவர்கள் மத்தியில் குறைவான அளவுக்கே ஒருமித்த கருத்து நிலவுகிறது.

மனிதர்கள் அல்லாத பெரிய குரங்குகள் அய்ரோப்பாவில் சுற்றித் திரிந்ததற்கான ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, அவை க்ரீட்டில் காலடித் தடங்களை விட்டுச் சென்றிருக்கலாம் என இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மானுடவியல் நிபுணர் ராபின் குரோம்டன் விளக்குகிறார்.

வரலாற்றில் மனித இனம் ஆப்பிரிக்காவை விட உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றியிருக்கலாம் என்று நம்பப்பட்ட காலங்களும் இருந்தன,” என்று கூறுகிறார்.சந்தேகம் இல்லாத அறிவியல் நல்ல அறிவியல் அல்ல, ஆனால் மக்கள் வாதங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். ஆம், நமக்கு அதிக ஆய்வும் அதிக கண்டுபிடிப்புகளும் தேவை, ஆனால் சக ஆராய்ச்சியாளர்கள் வெறுமனே எங்கள் கண்டுபிடிப்புகளை நிராகரிப்பதை பார்க்க முற்றிலும் வேறாக இருக்கிறது”.

 மனிதக்காலடித்தடம் கண்டுபிடிக்கப் பட்டாலும் மனித இனம் மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றி இடம் பெயர்ந்த கொள்கை இன்றும் உயிர்ப்போடு உள்ளது.

No comments:

Post a Comment