சென்னை,அக்.26- சென்னை தலைமைச் செய லகத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது பேசிய அவர், "பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரத்து 68 விரிவுரையா ளர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி.மய்யம் மூலம் வரும் 28 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை கணிணி வழியாக நடத்தப் படும் என தெரிவிக்கப்பட்டி ருந்ததாகவும், இதில் தேர் வர்கள் அருகில் உள்ள மய்யங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் மய்யம் அமைக்க கோரிக்கை விடுத் தனர் என்றும் கூறினார்.
அதனடிப்படையில், தேர் வர்கள் அருகிலுள்ள தேர்வு மய்யங்களிலேயே தேர்வு எழுதுவது குறித்து புதிய அரசாணை வெளியிடப் படும் என கூறிய அவர், 129 மய்யங்களில் தேர்வர்களுக்கு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
மேலும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை ஒத்திவைக்கப்படுவதோடு, இதற்கான பணிகள் மேற் கொள்ள சில நாட்கள் ஆகும் என்பதால், இந்த தேர்வை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப் பட்டு பின்னர் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment