புதுடில்லி, அக். 25- ‘டிஜிட்டல்’ நிதி சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான ‘பேடிஎம்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
பேடிஎம் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 16 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.செபி அனுமதி வழங்கி இருக்கும் நிலையில், இந்நிறுவனம் நவம்பர் மாத மத்தியில், பங்குகளை சந்தையில் பட்டியலிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இன்னும் பேடிஎம் தரப்பிலிருந்து அதிகாரப் பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப் படவில்லை. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் பட்சத்தில், இதுவரை வந்த வெளியீடுகளிலேயே இது தான், அதிக மதிப்பு கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.இதற்கு முன் அதிகபட்சமாக, ‘கோல் இந்தியா’ நிறுவனம் 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் வகையில் பங்கு வெளியீட்டுக்கு வந்தது.
No comments:
Post a Comment