துர்க்கை சிலையை கரைத்த போது 5 இளைஞர்கள் பலி
ஜெய்ப்பூர், அக்.16- ராஜஸ்தானில் துர்க்கை சிலையை கரைத்தபோது ஆற்றில் மூழ்கி 5 இளைஞர்கள் பலியானார்கள்.
வடமாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. வழிபாடு நடத்தப்பட்ட துர்க்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் பணி நேற்று (15.10.2021) நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் பசேடி நகரில், பார்வதி ஆற்றில் கரைப்பதற்காக துர்க்கை சிலைகளுடன் 5 இளைஞர்கள் வந்தனர்.
ஆற்றின் ஆழம் தெரியாமல் அவர்கள் நீரில் இறங்கியபோது, ஆற்றில் மூழ்கி இறந்தனர். உடற்கூறாய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் அவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
அவர்கள் பெயர்கள் சத்யபிரகாஷ் (வயது 22), சிறீகிருஷ்ணா (23), சஞ்சய் (19), ராஜேஷ் (26). அவருடைய சகோதரர் ரன் வீர்சிங் (24) என்றும், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது.
No comments:
Post a Comment