சிறு, குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்குக் குறைந்தபட்ச நியாய விலை: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

சிறு, குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்குக் குறைந்தபட்ச நியாய விலை: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை, அக்.25 சிறு, குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டியே குறைந்தபட்ச நியாய விலை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை இண்ட்கோ சர்வ் நிறுவனம் அளிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது;

‘’பச்சைத் தேயிலைக்குக் குறைவான சந்தை விலை, தினக்கூலி அதிகரிப்பு, உரம் விலை உயர்வு, தேயிலை பறிக்கும் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரித்திருப்பால், நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தேயிலை உற் பத்தியாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

 நிர்வாகம் மற்றும் வாழ்வாதாரத்தை எதிர்கொள் ளும் வகையில் ரூ.100 கோடி அளவுக்குகார் பேருந்து நிதிஎன்ற வைப்பு நிதியைச் செயல்படுத்துவது குறித்து, சிறு தேயிலை உற் பத்தியாளர் களுடன் ஒன்றிய, மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, ஒரு கிலோ பச்சைத் தேயிலையின் குறைந்தபட்ச நியாய விலை ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், தேயிலைத் தொழிற் சாலைகளின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.125 என நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட சந்தை விலை குறைந்தால், ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்குகார்பேருந்துநிதியிலிருந்து சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ரூ.25 வழங்கப்படும்.

சந்தை விலை ரூ.125-அய் விட அதிகமானால், ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்குச் சிறு உற்பத்தியாளர்களுக்கு ரூ.25 கிடைக்காது. அந்தக் கூடுதல் தொகைகார்பேருந்துநிதிக்குத் திரும்பிச் சென்றுவிடும்.

17 இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலையை நவீனப்படுத்த, நபார்டு வங்கியிடமிருந்து ரூ.70 கோடி கடனாக இண்ட்கோசர்வ் பெற்றுள்ளது.

இந்தக் கடனைகார்பேருந்துநிதிக்குத் திருப்பி விட வேண்டும். அப்போதுதான் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் குறைந்த பட்ச நியாய விலையை முன் கூட்டியே பெற முடியும்.

அத்தோடு, தனியார் மற்றும் 17 இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளுக்கான தேயிலை ஏலம் வெளிப்படை யாக நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறு உற்பத்தி யாளர்கள் முன் வைக்கின்றனர். இண்ட்கோ தேயிலைத் தொழிற் சாலைகளை நவீனப்படுத்துவது, பச்சைத் தேயிலைக்குக் குறைந்த பட்ச நியாய விலை கிடைக்க உதவாது என்பதே தேயிலை உற்பத்தியாளர்களின் அச்சமாக இருக்கிறது.

எனவே, சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டியே குறைந்தபட்ச நியாய விலை கிடைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகள் நவீனப்படுத்தப்பட்ட பின்ன ரும், சிறு தேயிலை உற்பத்தி யாளர்களுக்குக் குறைந்தபட்ச நியாய விலை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை இண்ட் கோசர்வ் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment