குடந்தையில் நடைபெற்ற வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

குடந்தையில் நடைபெற்ற வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

குடந்தை, அக்.26 கும்பகோணம், பெரியநாயகி விலாஸ் திருமண மண்டபத்தில், 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி அரு. ரெங்கநாதன்- சாவித்திரி ஆகியோரது பெயரனும்அரங்க. வைரமுடி - தங்கமணி ஆகியோரது குமாரனுமாகிய செல்வன் வை. சரத்குமார்  மயிலாடுதுறை  .ராஜ்குமார்- அபிராமி ஆகியோரது குமாரத்தி செல்வி இரா.திவ்யா B.Tech ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை  திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று  நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

மணவிழாவில் குடந்தை சட்டமன்ற உறுப்பினர் .அன்பழகன், தி.மு. நகர செயலாளர் சுப.தமிழழகன், சி.பி.அய். மாவட்ட செயலாளர்  பாரதி, சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் , தி.மு. ஒன்றிய செயலாளர் பாஸ்கர், தி.மு. ஒன்றிய செயலாளர் கணேசன்,காங்கிரஸ் நகர செயலாளர் அய்யப்பன்,குடந்தை வழக்குரைஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.எஸ் லோகநாதன்,சமூக ஆர்வலர் வழக்குரைஞர் ஜார்ஜ், குடந்தை அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு. சின்னையன் மற்றும் தஞ்சை மண்டல தலைவர் அய்யனார், தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், குடந்தை மாவட்டத் தலைவர் நிம்மதி, மாவட்ட செயலாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், விஜயகுமார், மாநகர தலைவர் கவுதமன், செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் ஜில்ராஜ், மாவட்ட அமைப்பாளர் அழகுவேல்,மண்டல மகளிரணி தலைவர் கலைச்செல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயமணி, மகளிர் அணி துணை செயலாளர் திரிபுரசுந்தரி, மாவட்ட அமைப்பாளர் அழகுவேல்,மாவட்டத் துணைசெயலாளர் தமிழ்மணி, துணை தலைவர் கோவிந்தன், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன், அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகர செயலாளர் பழ. அன்புமணி தொகுத்து வழங்கினார். வருகை தந்தோரை கார்த்தி வித்யாலயா பள்ளி ஆசிரியை காயத்ரி ரவிச்சந்திரன் வரவேற்றும், திருச்சி மூத்த வழக்குரைஞர் எஸ்.பி.சாமி நன்றியும் கூறி உரையாற்றினார்கள். வருகைதந்தோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்  எழுதிய இயக்க நூல்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment