எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

சென்னை,அக்.27- தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு, எஸ்எஸ்சி (பணியாளர் தேர்வாணையம்) நடத்தவுள்ள பட்டப் படிப்பு தகுதியான போட்டித் தேர்வுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்பு சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28ஆம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சியின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். எனவே, போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு peeo.chn@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 94999-66028 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி பயிற்சியில் சேரலாம்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா... கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

சென்னை,அக்.27- சென்னை தண்டையார்பேட் டையைச் சேர்ந்த வழக்குரைஞர் கோபிநாத்,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைஅளித்திருந்தார். அதில், “சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் கல்யாணராமன்(வயது 55) என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும், மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். இதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன்,கடந்த 2 மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக டிவிட்டரில் 18 பதிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை காவல்துறையினர் கல்யாணராமனை கடந்த 16ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, கல்யாணராமன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒற்றை மரபணு அழற்சி குடல் நோயால்

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை

சென்னை, அக்.27   ஒற்றை மரபணு சார்ந்த அழற்சி குடல் நோய் என்ற அரிதான மரபணு பிரச்சினைக்காக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (பிஎம்டி) மேற்கொள்ளப்பட்ட லோச்சன் என்ற பெயரிலான குழந்தைக்கு வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர்கள் உதவியிருக்கின்றனர்.  சிக்கல்களுக்குப் பிறகு இந்த ஆண் குழந்தை, எக்மோ சாதனத்தின் (செயற்கை சுவாசக்கருவி) கீழ் வைக்கப்பட்டிருந்தான்.  எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்ட ஒரு குழந்தைக்கு எக்மோ சிபிஆர் செய்யப்பட்டது இந்தியாவில் இதுவே முதன்முறையாகும்.  அத்துடன், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையைத் தொடர்ந்து எக்மோ சாதனத்தின் கீழ் வைக்கப்பட்டு, உயிர்பிழைத்த முதல் குழந்தையாகவும் இது இருக்கிறது.  

இந்த நிகழ்வு குறித்து டாக்டர். ஆர். கார்த்திக் நாராயணன் தனது சிந்தனைகளை பகிர்ந்துகொண்டபோது, 99 சதவீத சாத்தியத்துடன் உயிரிழந்திருக்கக்கூடிய ஒரு குழந்தையை காப்பாற்றுவது முக்கியம் என்றாலும், அதன்பிறகு திருப்திகரமான மூளை நரம்பியல் இயல்பு செயல்பாட்டை குழந்தை கொண்டிருப்பதை உறுதி செய்வதில் தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.  வளர்ச்சிக்கான இழக்கப்பட்ட அளவீடுகளை திரும்ப பெறவும் மற்றும் இயல்பு வாழ்க்கையை குழந்தை வாழ்வதும் முக்கியமானது.  அத்துடன், மாற்றுப்பதியம் செய்யப்பட்ட எலும்பு மஜ்ஜை சிகிச்சை வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் இக்குழந்தைக்கு மற்றுமொரு முக்கியமான அம்சமாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்றுகளிலிருந்து

பாதுகாப்பு தரும் மருந்து அறிமுகம்

சென்னை, அக்.27  ஒரு புதிய திருப்பமாக, சிப்லா சுகாதார மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் முன்னணி நாசி அடைப்பு நீக்கி பிராண்டான நாசெலின், கொரோனா வைரஸ் மற்றும் சுவாசக் குழாயின் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு தரும் போவிடோன் அயோடினுடன் கூடிய நாசலின் ஆன்டி-வைரஸ் நேசல் ஸ்ப்ரேயை அறிமுகப்படுத்தியுள்ளது.  கோவிட்-19-அய் ஏற்படுத்தும் சார்ஸ்-கோவி -2 வைரஸுக்கு எதிரான பாதுகாப்பின் முதல்நிலை பாதுகாப்பாக போவிடோன் அய்யோடின் செயல்பட முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சக்திவாய்ந்த ஆன்டிவைரல் பண்புகளுடன் வரும் இந்த ஸ்ப்ரே பரந்த பயன்பாட்டிற்கு ஏற்றது, குறிப்பாக அதிக ஆபத்து வகையின் கீழ் வரும் அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு ஏற்றது.

போவிடோன் அய்யோடின் என்பது வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட நம்பகமான மூலக்கூறு ஆகும், இது சளி, சைனசிடிஸ் அல்லது காய்ச்சல் போன்ற பொதுவான மேல் சுவாசக் குழாய் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் மற்றும் பிற கிருமிகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிவம்பூரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment