உரத்தநாடு மண்டலக்கோட்டை வீ. தனபால் மறைவு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

உரத்தநாடு மண்டலக்கோட்டை வீ. தனபால் மறைவு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

உரத்தநாடு,அக்.27- வடசென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் . பர்தீன் தந்தையார் தனபால் நேற்று (26.10.2021) மறைவுற்றார். மறைவுற்ற தனபால் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

வடசென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் .பர்தீன் தந்தையார் வீ. தனபால் (வயது 55) தஞ்சை மருத்துவ கல்லூரி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைந்தார். 26.10.2021 அன்று மாலை 5.00 மணி அளவில் அவரது சொந்த ஊரான உரத்தநாடு மண்டலக் கோட் டையில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

இறுதி நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்று மாலை வைத்து மரியாதை செலுத்தி பர்தீன் மற்றும் குடும்பத்தினருக்கு இரங் கலுடன் ஆறுதலைத் தெரிவித்தார்.

உடன்  பொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர் சிங், ஒன்றிய தலைவர் .ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் . இலக்குமணன், மாநில வீதி விளையாட்டுக்கழக செய லாளர் நா. இராமகிருட்டிணன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், நகர தலைவர் பேபி. ரவிச்சந்திரன், நகர செயலாளர் ரா.ரஞ்சித் குமார், மேற்குப் பகுதி செய லாளர் . மோகன்தாஸ், நகர துணை செயலாளர் வழக்குரைஞர் .மாரிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர்கள் இரா. சுப்ரமணியன், நா. பிரபு, நகர இளை ஞரணி தலைவர் பு.செந்தில் குமார், நகர இளைஞரணி செயலாளர் பேபி. ரமேஷ், ஒன்றிய விவசாய அணி தலைவர் மா. மதியழகன், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் பா.பாலகிருட்டிணன் கிழக்குப் பகுதி செயலாளர் துரை. தன்மானம் மண்டல மாணவர்கழகத் செயலாளர் சற்குணம், நெடுவை கு.லெனின், ஒக்கநாடு மேலையூர் திரா விடச் செல்வம், ஒக்கநாடு மேலையூர் பெரியார்மணி, மண்டலகோட்டை கிளைக் கழக தோழர்கள் செந்தில்குமார், சுரேந்தர், பிரபா, அறிவுச்செல்வன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு இரங்கலை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment