சென்னை, அக்.25 தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 6ஆவது கட்ட முகாமில் 22.33 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மய்யங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்.12ஆம் தேதி முதல் வாரந்தோறும் 5 கட்ட மெகா முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் 6ஆவது கட்ட முகாம் இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மய்யங்களில் 23.10.2021 அன்று நடந்தது. இதன் படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மய்யங்கள், சத்துணவு மய்யங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடந்த முகாமில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 445 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பரிசுப் பொருட்கள் விநியோகம்
தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட் டனர். இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப் பூசிபோடப்பட்டது. சில இடங் களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந் தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தார். இதே போல், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் களும் முகாமை ஆய்வு செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப் பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவதில்லை. அதனால், அவர் களுக்காக இந்தவாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 6ஆம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 23.10.2021 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் நேற்று 50 ஆயிரம்இடங்களில் நடைபெற்ற 6ஆவதுமெகா முகாமில் முதல் தவணையாக 8 லட்சத்து 67,573 பேருக்கும், இரண்டாவது தவணை யாக 13 லட்சத்து 65,646 பேருக்கும் என மொத்தம் 22 லட்சத்து 33,219 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment