சென்னை, செப்.17- தந்தை பெரியாரின் பிறந்தநாள் தமிழ் நாட்டில் சமூகநீதி நாளாகக் கொண் டாடப்படுகிறது. இதையொட்டி ஹலோ எப்.எம்.மில். நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சமூகநீதி பற்றிய சிறப்பு ஹலோ தமிழா நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
இதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் பலர் பங்கேற்று பேசுகின்றனர். சமூக நீதி நாள் அறிவிக்கப்பட்டது ஏன்?, சமூக நீதி நாள் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய விஷயங்கள், பெரியாரின் பார்வையில் சமூக நீதி என்றால் என்ன? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக அலசியுள்ளனர்.
No comments:
Post a Comment