அதே ‘பகவான்'தானே!
கேள்வி: தங்கையான என்னிடம் சகோதரர்கள் அன்புடன் நடக்க யாரை வழிபடலாம்?
பதில்: தங்கை திரவுபதியின் மானம் காத்த பகவான் கிருஷ்ணனை வழிபடுங்கள். கோபாலா.... கோவிந்தா... என்னும் திருநாமத்தை நம்பிக்கையுடன் ஜெபியுங்கள்.
- ‘தினமலர்' ஆன்மிக மலர், 17.9.2021
தங்கையின் மானத்தைக் காக்க ஆடை கொடுத்த அதே ‘பகவான்' கிருஷ்ணன்தானே, குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிக்கொண்டு, மரத்தில் ஏறிக்கொண்டு பெண்களை கைகளைத் தூக்கியபடி வரச் சொன்னான்.
பசி அடங்குமா?
கேள்வி: குளித்ததும் மானசீகமாகக் கோவிலுக்குச் செல்வதாக நினைத்தால் பலனுண்டா?
பதில்: உண்டு. கரோனா அலை ஒழியும்வரை இதைப் பின்பற்றுவது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
- ‘தினமலர்' ஆன்மிக மலர்
கோவிலுக்குப் போகவேண்டாமாம், கோவிலுக்குப் போவதாக மானசீகமாக நினைத்தாலே போதுமாம்.
பசி வரும்போது சாப்பிட வேண்டாம்; சாப்பிட்டதாக மானசீகமாக நினைத்தாலே போதும் - பசி அடங்கிப் போய்விடுமா?
அதென்ன கரோனா காலம் வரை?
கரோனாவால் திருப்பதி ஏழுமலையான் அர்ச்சகரே செத்துப் போனார் என்பது கூடுதல் செய்தி!
No comments:
Post a Comment