ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்திய பத்திரிகையாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்திய பத்திரிகையாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு!

ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தலைவர் முன்னிலையில் தீர்மானம்!

ராஞ்சி, செப்.21- ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இரண்டாம் நாள் அகில இந்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு பல் வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசைப் பாராட்டி ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தலைவர் முன்னிலையில்   தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:-

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இரண்டாம் நாள் அகில இந்திய மாநாட்டில் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் தலைவர் ரவீந்திர நாத் மாத்து கலந்து கொண்டார். தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்மு..ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசுக்குப் பாராட்டு

தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment