லண்டன்,செப்.24- இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனமும் இணைந்து கரோனா தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளன. கரோனாவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 90 சதவீத செயல் திறனை கொண்டிருப்பதாக கடந்த ஜூன் மாதம் இந்த நிறுவனங்கள் அறிவித்திருந்தன.
இந்நிலையில், இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் மேற்படி நிறுவனங்கள் மனு செய்துள்ளன. பன்னாட்டு தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கும் எனவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடுகையில் நோவாவேக்ஸ் தடுப்பூசியை எடுத்துச் செல்வதும், சேமித்து வைப்பதும் எளிது என்பதால், ஏழை நாடுகளுக்கு அதிக டோஸ்கள் கிடைப்பதில் இந்த தடுப்பூசி முக்கிய பங்காற்றும் என இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment