பாதுகாப்பான கடன் பத்திரங்கள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

பாதுகாப்பான கடன் பத்திரங்கள் வெளியீடு

சென்னை, செப். 27- தங்க நகைக் கடனை மய்யமாகக் கொண்ட வங்கி சாராத நிதி நிறுவனமான இன்டெல் மணி, மாற்ற முடியாத பத்தி ரங் களை (NCD) வெளியிடு வதன் மூலம் 150 கோடி ரூபாய் வரை திரட்டப் போவ தாகக் கூறியுள்ளது.

இந்த வெளியீடு 23.9.2021 இல் தொடங்கி 18.10.2021 அன்று முடிவடைகிறது.

ரூ75 கோடி வரை அடிப்படை வெளியீட்டு அளவும், ரூ. 75 கோடி வரை சந்தாவை தக்க வைத்துக்கொள்ளும் விருப் பம் போன்ற அம்சங்களுடன் இந்த 150 கோடி ரூபாய் வெளி யீடு நடைபெறவுள்ளது.

கடன் பத்திரங்களின் முகப்பதிப்பு தலா ரூ.1000 ஆகும். பாதுகாப்பான மாற்ற முடியாத கடன் பத்திரங் களுக்கான கால அளவு 366 நாட்கள் முதல் 54 மாதங்கள் வரையிலாகவும், பாதுகாப் பற்ற மாற்ற முடியாத கடன் பத்திரங்களுக்கான கால அளவு 61 முதல் 71 மாதங்கள் வரையிலாகவும் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவுள்ள இந்த கடன் பத்திரங்களின் குறைந்த பட்ச விலை ரூபாய் 10000 ஆகும் என இந்நிறுவன நிர்வாக இயக்குநர் உமேஷ் மோகனன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment