சென்னை, செப்.19 சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இதர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
No comments:
Post a Comment