9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 15, 2021

9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை, செப்.15 காஞ்சி புரம், செங்கல்பட்டு உள் பட 9 மாவட்டங்க ளில் உள்ளாட்சித் தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன் கிழமை) தொடங்குகிறது.

காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, நெல்லை, தென் காசி ஆகிய 9 மாவட் டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப் புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோ பர்) 6 மற்றும் 9ஆம் தேதி களில் நடக்கிறது.

இதுதவிர 28 மாவட் டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு அக்டோபர் 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக் கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர்கள், ஊராட்சி ஒன் றிய வார்டு உறுப்பினர் கள், கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகு தியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவ லரான வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேட்பு மனுக் கள் தாக்கல் செய்ய வேண் டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலக உதவி தேர்தல் நடத்தும் அலுவல ரான ஊராட்சி செயலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

அலுவலக நாட்களில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வரு கிற 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் 23ஆம் தேதி பரிசீலனை செய்யப்படு கிறது. மனுக்களை திரும் பப்பெற 25ஆம் தேதி கடைசி நாளாகும்.

வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும்போது வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களையோ, உறுதிமொழிகளையோ அளிக்கக்கூடாது. ஒருவர் எந்த ஊராட்சி அமைப் பின் உறுப்பினர் அல்லது தலைவராக போட்டியிட விரும்புகிறாரோ, அந்த ஊராட்சி வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய வார்டுக்கு போட்டியிடு வோர் பெயர், தொடர்பு டைய ஒன்றிய வாக்காளர் பட்டியலிலும், மாவட்ட ஊராட்சி வார்டுக்கு போட் டியிடுவோர் பெயர், தொடர் புடைய மாவட்ட வாக்கா ளர் பட்டியலிலும் இடம் பெற்றி ருக்க வேண்டும்.

வேட்பாளரின் கல் வித் தகுதி, சொத்து விவ ரம் மற்றும் குற்றவியல் விவரங்களை வாக்காளர் கள் அறிந்து கொள்ளும் வகையில் வேட்பு மனு வுடன் ரூ.20-க்கான முத் திரைத்தாளில் ஆணை உறுதி ஆவணம் (அபி டெவிட்) வேட்பாளர் களால் படிவம் 3-ஏஇல் தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர் கள் பிரகடன அறிக்கை அளித் தால் போதுமானது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட அங் கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் படிவம் மற்றும் படிவம் பி ஆகிய வற்றை பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவ லர், உதவி தேர்தல் நடத் தும் அலுவலரிடம் வேட் புமனு திரும்பப்பெறும் நாளன்று பகல் 3 மணிக்கு முன்னதாக வழங்க வேண் டும். காலம் கடந்து படி வங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளராக மட்டும் கருதப்படுவார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளன்று அவர் 21 வயது நிறைவ டைந்தவராக இருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர், கிராம ஊராட்சி வார்டு உறுப் பினர் தேர்தலுக்கு ரூ.200, ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்த லுக்கு தலா ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பி னர் தேர்தலுக்கு ரூ.1,000 வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர், மேற் கூறிய தொகையில் 50 சதவீதம் செலுத்த வேண் டும். மேற்கண்ட தகவல் களை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment