மாஸ்கோ-, செப். 21- ரஷ்ய பல்கலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் எட்டு மாணவர்கள் உயிரிழந் தனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள மருத்துவ பல்கலைக் கழக வளா கத்தின் முதல் தளத்தில் நேற்று (20.9.2021) அடை யாளம் தெரியாத ஒருவர் திடீரென துப்பாக்கியு டன் நுழைந்து சரமாரி யாக சுட்டார். இதில் எட்டு மாணவர்கள் பலி யாயினர். காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த நபர் துப்பாக் கிச்சூடு நடத்தும் காட்சி கள் சமூக வலைதளங் களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சிப் பதிவில் துப்பாக்கிச்சூட் டில் இருந்து தப்பிக்க, மாணவர்கள் பலரும் கட் டடத்தின் முதல் மாடியில் இருந்து வெளியே குதிக் கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. துப்பாக் கியால் சுட்டவர் திமூர் பெக்மன்சுரோவ், 18, என அடையாளம் காணப்பட் டதாகவும், காவல்துறையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் அவர் பலியா னதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது. இதற்கி டையே பெர்ம் பல்கலை யில் படிக்கும் இந்திய மாணவர்கள் அனைவ ரும் பாதுகாப்பாக இருப் பதாக அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment