10, 11ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

10, 11ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, செப்.14- 10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் சற்று அதிகரித்ததை தொடர்ந்து, பிளஸ் 2 வரையிலான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், 10ஆம்வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்கள் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்குவது போல இருப்பதால், 10, 11ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment