"கலைஞர் கவிதாஞ்சலி" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

"கலைஞர் கவிதாஞ்சலி"

குவளையில் பிறந்தவரே

குணத்தில் சிறந்தவரே

அய்யா - அண்ணாவிடம் படித்தவரே

ஆரியப் பகை முடித்தவரே !

அன்னைத் தமிழ்நாட்டிற்கு

அழகு தமிழ் பெயர் தந்தான் அண்ணன்!

செம்மொழி எனும் அணிகலனை

அன்னைக்கு அணிவித்த நீ மன்னன்!

வடக்கு வாழ்ந்து தெற்கு தேயும்

வழக்கத்தை மாற்றியதில் தென்னன் !

இழித்துப் பழித்தோர்க்கும்

இன்னா செய்தோர்க்கும் - நீ

நன்னயமே செய்திட்டாய்

நற்புகழை எய்திட்டாய் !

தன்னலமின்றி நீ உழைத்ததால்

தமிழ்நாடு தழைத்தது

தமிழினம் பிழைத்தது !

நூறாண்டு வாழ்வாய்

ஆறாம் முறை ஆள்வாய்

என்று நாங்கள் காத்திருந்தோம்

அந்த நாளை எதிர்பார்த்திருந்தோம் !

உடலால் மறைந்தாய்

உள்ளத்தில் நிறைந்தாய் !

காலம் எல்லாம் உன் புகழ் வாழும்

கடைசி வரை இந்த தமிழ் மண்ணை ஆளும் !!

 

- இராம. வைரமுத்து

கழக வழக்குரைஞர், மதுரை

No comments:

Post a Comment