குவளையில் பிறந்தவரே
குணத்தில் சிறந்தவரே
அய்யா - அண்ணாவிடம் படித்தவரே
ஆரியப் பகை முடித்தவரே !
அன்னைத் தமிழ்நாட்டிற்கு
அழகு தமிழ் பெயர் தந்தான் அண்ணன்!
செம்மொழி எனும் அணிகலனை
அன்னைக்கு அணிவித்த நீ மன்னன்!
வடக்கு வாழ்ந்து தெற்கு தேயும்
வழக்கத்தை மாற்றியதில் தென்னன் !
இழித்துப் பழித்தோர்க்கும்
இன்னா செய்தோர்க்கும் - நீ
நன்னயமே செய்திட்டாய்
நற்புகழை எய்திட்டாய் !
தன்னலமின்றி நீ உழைத்ததால்
தமிழ்நாடு தழைத்தது
தமிழினம் பிழைத்தது !
நூறாண்டு வாழ்வாய்
ஆறாம் முறை ஆள்வாய்
என்று நாங்கள் காத்திருந்தோம்
அந்த நாளை எதிர்பார்த்திருந்தோம் !
உடலால் மறைந்தாய்
உள்ளத்தில் நிறைந்தாய் !
காலம் எல்லாம் உன் புகழ் வாழும்
கடைசி வரை இந்த தமிழ் மண்ணை ஆளும் !!
- இராம. வைரமுத்து
கழக வழக்குரைஞர், மதுரை
No comments:
Post a Comment