முகக்கவசம் அணிவதால் கரோனா காலத்தில் காசநோய் பாதிப்பு குறைவு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

முகக்கவசம் அணிவதால் கரோனா காலத்தில் காசநோய் பாதிப்பு குறைவு?

சுகாதாரத் துறையினர் ஆய்வு

கோவை, ஜூலை 28 நுரையீரல் காசநோய் வந்தவர்களின் சளி, இருமல், தும்மலில் இருந்து, காற்றில் நீர்த் திவலைகள் பரவி மற்றவர்களுக்கு காசநோய் ஏற்படு கிறது. காசநோய் பாதிப்பில் இந்தியா முன்னணியில் இருப்ப தால் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் அதை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து, அதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு கோவையில் காசநோயால் 4,761 பேரும், 2019இல் 4,933 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையானது 2020இல் 3,495 ஆக குறைந்தது. 2021 -இல் கடந்த 6 மாதத்தில் 1,746- ஆக உள்ளது. இதுதொடர்பாக சுகா தாரத்துறை துணை இயக்குநர் (காசநோய்) சக்திவேல் கூறிய தாவது:

கரோனா பரவல், பொதுமுடக் கம் ஆகிய காரணங்களால் காசநோ யாளிகளை கண்டறி வதில் ஏற்பட்ட தொய்வு, கரோனா காரணமாக பொது மக்கள் காசநோய் பரிசோதனை செய்துகொள்ளகாட்டிய தயக்கம் ஆகியவை எண்ணிக்கை குறைய காரணமாக இருக்கலாம். கரோனா பரவலுக்கு முன்புவரை மாதத்துக்கு சராசரியாக 3,000 பேருக்கு அரசு மருத்துவ மனைகளில் காசநோய் பரிசோ தனை மேற்கொள்ளப் பட்டது. கரோனா பாதிப்புக்கு பிறகு, இந்த எண்ணிக்கையானது 800-ஆக குறைந்துவிட்டது.

கரோனா போன்றே சளி, இருமல்,தும்மலில் இருந்து காற் றில் நீர் திவலைகள் பரவி மற்றவர் களுக்கு காசநோய் ஏற்படுகிறது. கரோனா காலத்தில் பெரும்பாலா னோர் முகக்கவசம் அணியத் தொடங்கினர். எனவே, கரோனா தடுப்பு விதிமுறைகளாலும் காச நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என கருது கிறோம். இருப்பினும், உண்மை நிலவரத்தைஅறிய மாநகராட்சி காய்ச்சல் முகாம்களில் பரி சோதனை செய்துகொண்ட வர்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல், மூச்சுத்திணறல் பாதிப் பால் அனுமதிக்கப் பட்டவர் களின் விவரத்தை சேகரித்து வருகிறோம்.

அவர்களை நேரடி யாக தொடர்புகொண்டு காச நோய்க்கான அறிகுறிகள் ஏதே னும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி வருகிறோம்.

யாருக்கு பரிசோதனை அவசியம்

சர்க்கரை நோய், புற்றுநோய் பாதித்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டிருப் பவர்களுக்கு இருமல் இருந்தால் காசநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மற்றவர் களுக்கு இருமல், மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், பசியின்மை, சோர்வடைதல், இரவு நேரங்களில் வியர்வை, சளியில் ரத்தம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை அவசி யம். குழந்தைகளாக இருந் தால், 2 வாரத்துக்கும் மேல் இருமல், வயதுக்கு ஏற்ற உடல் எடை கூடாமல் இருப்பது, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவ மனையை அணுக வேண்டும்.

காசநோய் கண்டறியப் பட்டால் தொடர் சிகிச்சை மூலம் 100 சதவீதம் குணப்படுத்த முடியும்.

காசநோயால் பாதிக்கப் பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் சத்தான உணவு சாப்பிட, அவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக ஒன்றிய அரசு சார்பில் செலுத்தப் படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment