புதுடில்லி, ஜூலை 27 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் சென்றார். டிராக்டரை தானே ஓட்டி வந்தார். தனது வீட்டில் இருந்தே நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் பேரணியாகச் சென்றார்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
போராடி வரும் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டேன். அவர்கள் (ஒன்றிய அரசு) விவசாயிகளின் குரல்களை அடக்குவதோடு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதில்லை. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் 3-4 வியாபாரிகளுக்கு மட்டும் ஆதரவாக உள்ளது என்பதை நாடு அறியும் என கூறினார்.
No comments:
Post a Comment