ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு அரசுப் பணி : அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு அரசுப் பணி : அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை 27 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு, அவர்கள் தமிழ்நாடு திரும்பிய தும் அரசுப் பணிக்கான உத்த ரவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவார் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் நேற்று (26.7.2021) கூறியதாவது:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து  சென்றுள்ள விளை யாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உற்சா கப்படுத்தும் வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடல் அடிப் படையில் வென்று வா வீரர்களே என்ற ஹேஷ்டேக்கை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் போட்டியில் இந் தியாவில் இருந்து 127 வீரர்கள் பங்கேற்கும் நிலையில், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு துணைநிற்கும் வகையில், உலகில் உள்ள 77 நாடுகளைச் சேர்ந்த தமிழர்களை ஒருங்கிணைக்க இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

வென்றுவா வீரர்களே பாட லுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத் துள்ளார். தமிழ்நாடு கூடை பந்தாட்டக்கழகம் இந்தப் பாடலை தயாரித்து அளித் துள்ளது. தமிழ்நாட்டில் 4 மண்ட லங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்து 6 முதல் 14 வயதுக் குட்பட்டவர்களைத் தேர்வு செய்து உயரிய பயிற்சி அளிக்கப்படும். தேவைப்பட்டால் வெளி நாட்டுக்கு அனுப்பியோ அல் லது வெளிநாட்டு பயிற்சியாளர்களை இங்கு அழைத்து வந்தோ பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், தற்போது டோக் கியோ சென்றுள்ள 11 பேரில் 9 பேர் அரசு, தனியார் துறைகளில் பணியில் உள்ளனர். மிக வறு மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமி இருவரும் தாயகம் திரும்பியதும், அவர் களுக்கு அரசுப் பணி நியமன ஆணையை முதல மைச்சர் வழங்குவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment