அறந்தாங்கி, ஜூலை 30- அறந்தாங்கி அருகில் உள்ள மேற்பனைக்காட்டில் 25.7.2021 அன்று மாலை அய்ந்துமணிக்கு திராவிட மாணவர் சந்திப்புக்கூட்டம் திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலை மையில் சிறப்பாக நடைபெற்றது. திராவிட மாணவர் கழக புதிய கிளை தொடங்கப்பட்டது.
பெரியாரியல் பயிற்சி வகுப்பில் முதல் மாண வராக தேர்ச்சிபெற்ற வெங்கடேசுவரன் உள்ளிட்ட மாணவர்களுக்கு பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. சந்திப்புக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, ஒன்றிய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் வேல்சாமி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் மாணவர்களிடம், அறிவுலக பேராசான் உலகத் தலைவர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் சமூக தொண்டையும் கல்வி உரிமையையும் போராடிப் பெற்ற உரிமைகளையும், ஏன் திராவிட மாணவர் கழகத்தில் இணைய வேண்டும் என விளக்கி சிறப்புரையாற்றினார்.
மண்டல திராவிடர் கழகத் தலைவர் பெ.இராவ ணன், பொதுக்குழு உறுப்பினர் சவுந்தர் ராசன், பட்டுக்கோட்டை மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன், அறந்தாங்கி மாவட்ட இளை ஞரணி தலைவர் மகராசா, பிரபு, கோமாபுரம் குட்டி வீரமணி, ஆலங்குடி முருகேசன், அறந் தாங்கி ஒன்றியத்தலைவர் சந்திரகுமார் ஆகியோர் மாண வர்களை வரவேற்று வாழ்த்தினர். சித்தாதிக்காடு லெ.க.நீலகண்டன், சு.வசீகரன், க.கருணாகரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
பெரியார் பிஞ்சு சந்தா
மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா இரண்டு பெரியார்பிஞ்சு இதழுக்கு சந்தாக்கள் வழங்கினார். பங்கேற்ற மாணவர் நா.சக்தியின் நன்றி யுரையோடு இனிதே நிறைவடைந்தது.
புதிய பொறுப்பாளர்கள்
மேற்பனைக்காடு கிழக்கு கிளைக் கழக திராவிட மாணவர் கழகப் புதிய பொறுப்
பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தலைவர்:செ. வெங்கடேசு வரன், செயலாளர்: நா.சக்தி, அமைப்பாளர்:ச.தீபிகா.
No comments:
Post a Comment