புஞ்சை புளியம்பட்டியில் சுவரெழுத்துப்பணிகளில் இளைஞரணி தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

புஞ்சை புளியம்பட்டியில் சுவரெழுத்துப்பணிகளில் இளைஞரணி தீவிரம்

தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மண்டலம் முழுவதும் சுவரெழுத்து பிரச் சாரம் மேற்கொள்வ தென்றுஈரோடு மண்டல கழக கலந்து ரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி ஈரோடு மண்டலம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாள் சுவரெழுத்து பிரச்சாரப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாள் சுவரெழுத்து பிரச்சார விளம்பரத்திற்கு ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சாலைகளில் உள்ள சுவர்களை திராவிடர்கழக இளைஞரணி சார்பில் முன் பதிவு செய்யப்பட்டு விரைவில் சுவரெழுத்து விளம்பரங்கள் எழுத உள்ளார்கள். ‌

No comments:

Post a Comment