பாட்னா, ஜூலை 6- பீகார் மாநிலத்தில் பாஜக கூட் டணி ஆட்சியில் ஊழல் கட்டுக் கடங்காமல் போய் விட்டது. பணம் கொடுக் காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே குற் றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சர் மதன் சாஹ்னி கூறியதா வது, “எனது துறையில் சில நியமனங்களுக்கும், பணிமாறுதல்களுக்கும் அமைச்சர் என்ற முறை யில், நான் ஒப்புதல் அளித்த பிறகும் அதிகாரிகள், அந்தப் பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டுள்ள னர். பாட்னாவில், ஒரு வீடும் காரும் பெறுவது ஒருவரை அமைச்சரா க்காது. அமைச்சர் பதவியிலிருந்து விலகவிருக்கி றேன். அதற்கான கடிதத்தை தயார் செய்து வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment