புதுடில்லி, ஜூலை 21- ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டை விட, 17 ஆயிரத்துக்கும் அதிக மான புதிய நிறுவனங்கள் துவக் கப்பட்டிருப்பதாக, பெருநிறு வன விவகாரத் துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை யிலான காலத்தில், மொத்தம் 36 ஆயிரத்து, 191 புதிய நிறு வனங்கள் துவக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத் தில், 18 ஆயிரத்து, 968 நிறுவ னங்கள் துவக்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண் டில், 17 ஆயிரத்து, 233 நிறுவ னங்கள் கூடுதலாக துவக்கப் பட்டுள்ளன. ஜூன் மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 21.87 லட்சம் பதிவு பெற்ற நிறுவ னங்கள் உள்ளன. இவற்றில், 13.7 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த நிதியாண் டில் மட்டும் 14 ஆயிரத்து, 674 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment