புதுடில்லி ஜூலை 30 குழந்தை களுக்கான கரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் கிடைக்கலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாளவியா தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் கரோனா இரண் டாம் அலை பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. ஆயினும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்து வரு கிறது. இதையொட்டி தடுப்பூசி போடும் பணி நாடெங்கும் தீவிர மாக்கப்பட்டுள்ளது. விரைவில் கரொனா மூன்றாம் அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா மூன்றாம் அலை யின் தாக்குதல் சிறார்களுக்கு அதிக அளவில் இருக்கும் என கூறப் படுகிறது. இதையொட்டி இந்திய அரசு பல வழிமுறை களை வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை குழந்தை களுக்கான தடுப்பூசி மருந்து குறித்து ஒன்றிய அரசு எவ் வித தகவலும் வெளியிட வில்லை. மக்கள் அனைவரும் இந்த தகவ லுக்காகக் காத்திருக் கின்றனர்.
இந்நிலையில் பாஜக நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டில்லியில் நடந்துள்ளது. அப் போது உறுப்பினர்கள் குழந்தை களுக்கான கரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் எனக் கேள்விகள் எழுப்பி உள்ளனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாளவியா கலந்து கொண்டு இந்த கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் மன்சுக் மாள வியா தனது பதில்,
“வரும் ஆகஸ்ட் மாதம் குழந்தைகளுக் கான கரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப் புள்ளது. நாங்கள் இதற் கான பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்துள் ளோம். எனவே குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க வாய்ப் புள்ளது'' எனத் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment