தமிழ்நாட்டில் புயல், வெள்ளத்தைவிட இடி, மின்னலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 23, 2021

தமிழ்நாட்டில் புயல், வெள்ளத்தைவிட இடி, மின்னலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, ஜூலை 23 தமிழ் நாட்டில் புயல், வெள்ளத்தைவிட இடி, மின்னலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒன்றிய மாநில பேரிடர் மேலாண்மைத் துறைகள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் நாடு முழுவதும் மழை வெள்ளம், புயலால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. அதனுடன் இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகளை ஒப் பிடும்போது, இடி, மின்னல் உயிரி ழப்புகளே அதிகமாக உள்ளன.

நகர்ப்புறங்களில் கைப்பேசி களுக்கான கோபுரங்களில் இடி தாங்கிகள் நிறுவுவதால் இடி, மின்னலால் அரிதாகவே உயிரி ழப்புகள் ஏற்படுகின்றன. கிராமப் புறங்களில் ஏற்படும் உயிரிழப் புகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கவனம் பெறுவ தில்லை.

கடந்த 10.7.2021 அன்று ஒரே நாளில் உத்தரப்பிரதேசத்தில் 41 பேர், ராஜஸ்தானில் 20 பேர், மத்தியப் பிரதேசத்தில் 7 பேர் என 68 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட் டில்மழை வெள்ளம் காரணமாக கடந்த 2017_-2018 நிதியாண்டு முதல் 2020-_2021 வரை 195 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதே காலகட்டத்தில் இடி, மின்னலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 264 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில்  இடி, மின்ன லால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக் கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அதி காரிகள் கூறியதாவது:

இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை, இந்திய வானிலை ஆய்வு மய்யம் ஆகியவற்றுடன் வாரம் ஒருமுறை விவாதிக்கப்பட்டு வரு கிறது. புனே அய்.அய்.டி சார்பில், தமிழ்நாட்டில் 9 இடங்களில் இடி, மின்னல் உணர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. அவை தலா 200 கிமீ சுற்றளவுக்கு கண்காணிக் கும் திறன் உடையவை. அவற்றின் மூலம் கிடைக்கும் தரவுகள், டாமினி என்ற செயலி மூலமும் தெரிவித்து எச்சரிக்கப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மய்யம் வழங்கும் தரவுகள் அடிப் படையில் பேரிடர் மேலாண்மைத் துறையின் டிஎன் ஸ்மார்ட் செயலி, செய்தி தொலைக்காட் சிகள், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் ஒரு மணி நேரம் முன்னதாக எச்சரிக்கப் படுகிறது.

மேலும், இடி, மின்னல் ஏற்படும்போது நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்த விழிப்புணர்வு காணொலி, செய்தித் துறையின் நவீன வாகனங்கள் மூலம் திரையிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் முந்தைய ஆண்டுகளைவிட இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப் புகள் தற்போது குறைந்துள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சென்னையில் உள்ள ரேடார் பல ஆண்டுகளாக பழுதாகியுள் ளது. ஒடிசா மாநிலம் போன்று ரேடார் எண்ணிக்கையை அதிக ரிப்பது, வளிமண்டல மேலடுக்கு கண்காணிப்புக் கருவிகளை தமிழ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் பறக்க விடுவதன் மூலம் இன்னும் பல மணி நேரம் முன்னதாக இடி, மின்னல் ஏற்படுவதை அறிவித்து எச்சரிக்க முடியும் என்கின்றனர் வானிலை ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment