வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பணம் பறிப்பு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பணம் பறிப்பு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை

சென்னை, ஜூலை 28- முக நூலில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் நபர்கள் தற்பொழுது வாட்ஸ்அப் பில் தொடர்புகொண்டு மோசடி செய்துவருவது தெரியவந்துள்ளதால், அதில்  கவனத்துடன் இருக்க வேண்டும் என பொதுமக்களை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதி லும் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு பல்வேறு காவல்துறை உயர் அலு வலர்கள் மற்றும் காவலர் கள் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி மோசடி நடந்த தகவல் வெளியானது. முகநூலில் அவர்கள் பெயரில் போலி யாக கணக்கு தொடங்கும் நபர்கள், அவசரத் தேவைக் காக பணம் தேவைப்படு வதாக அதில் பதிவிட்டு, பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர். கூடு தல் காவல்துறைத் தலை வர் சந்தீப் ரத்தோர், கண் காணிப்பாளர் தகுதியில் உள்ள ஆர்.தினகரன், வி.பாலகிருஷ்ணன், சந் தோஷ் குமார், சென்னை காவல்ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், மாதவரம் காவல்உதவி ஆணைய ராக இருந்த அருள் சந் தோஷ் முத்து, வண்ணை நகர் காவல் உதவி ஆணை யர் ஜூலியஸ் சீஸர் உள் ளிட்ட உயர் அதிகாரிக ளின் பெயரிலும் இந்த மோசடி நடந்தது. இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ராஜஸ்தான் மாநிலம்பரத்பூர் மாவட் டத்தை சேர்ந்த ஷகீல் கான், அவரது கூட்டாளி ரவீந்தர்குமார் ஆகிய 2 பேரை ராஜஸ்தான் சென்று கைது செய்தனர்.

இந்நிலையில், தற் போது வாட்ஸ்அப்பில் இதேபோன்ற மோசடி யில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. காவல்துறை தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் அதிகாரி யின் புகைப்படத்தை வாட்ஸ் அப் டி.பி.யாக(டிஸ்பிளே பிக்சர்) வைத்து, அவருக்கு தெரிந்த சில நபர்களை வாட்ஸ்அப்பில் தொடர்பு  கொண்டுள்ளனர். ‘நண்பருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனதுபோன் பேபழு தடைந்துள்ளதால், தற் போது தகவல் பரிமாறிக் கொண்டிருக்கும் இந்த அலைபேசி எண்ணுக்கு கூகுள் பே மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்புங்கள். நாளை காலை திருப்பித் தருகிறேன்என்று அதில் தகவல் வந்துள்ளது. அவ ரது நண்பர்கள், அறிமுக மான நபர்கள் பலருக்கும் இத்தகவலை சில நபர்கள் அனுப்பியுள்ளனர். சந்தே கமடைந்த சிலர், அவரை தொடர்புகொண்டு விவரம் கேட்டுள்ளனர். தன் பெயரில் மோசடி நடப்பதை அறிந்த அவர், உடனே குறுந்தகவல் அனுப்பி நண்பர்களை எச்சரித்தனர்.

இந்த மோசடி குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசார ணையில் இறங்கியுள்ள னர். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இவ் வாறு வரும் அதிகாரப்பூர்வ மற்ற தகவல்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண் டாம் என்று சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment