சென்னை, ஜூலை 22 2021, ஜூலை 15ஆம் தேதி வரை கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்து வர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்பட 921 பேருக்கு, 'பிரதான் மந்திரி கரீப் கல்யான்' திட்டத்தின் கீழ் தலா ரூ.50 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள் ளது.
2020ஆம்
ஆண்டிலிருந்து கரோ னாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகா தாரப்பணியாளர்கள் என எத்தனை பேருக்கு
இழப்பீடு தொகை வழங்கப் பட்டுள்ளது என்று மாநிலங்கள வையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு
ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துபூர்வமாக பதில்
அளித்தார்.
அவர்
கூறியதாவது:
‘பிரதான்
மந்திரி கரீப் கல்யான்’ திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்தத்
திட்டத்தில் கீழ் கரோனாவில் பாதிக்கப்பட்டவர் களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து பாதிக்கப்படும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டம் 2021, ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கூடுதலாக 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது. கரோனாவில் பாதிக்கப் பட்டு சுகதாரப் பணியாளர்களில் உயிரிழந் தவர்களில் எத்தனைபேர் மருத்துவர்கள், செவிலியர்கள், பணி யாளர்கள் என அவர்கள் வகித்த
பதவி வாரியான கணக்கு அரசிடம் இல்லை.
2021, ஜூலை
15ஆம் தேதிவரை, கரோனாவில் உயிரிழந்த மருத்து வர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட் 921 பேருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா
2ஆவது அலையின் போது, சுகாதாரத்துறையில் மருத்து வர்கள், செவிலியர்கள் பற்றாக் குறையாக இருக்கிறார்களா என்பது குறித்து கணக்கெடுப்பு ஏதும் எடுக்கப்படவில்லை.
ஆனால்,
நாட்டில் தற்போது 10.14 லட்சம் அலோபதி மருத்து வர்களும், 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்களும் உள்ளனர்.
854 பேருக்கு
ஒரு மருத்துவர் என்ற விகிதம் நாட்டில் இருக்கிறது. 22.72 லட்சம் பதிவு செய்யப் பட்டசெவிலியர்கள் உள்ளனர்.
இதில்
16 லட்சம் பதிவு செய்யப் பட்ட செவிலியர்கள் பணியில்
உள்
ளனர்.
இவ்வாறு
பவார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment