தென் ஆப்பிரிக்காவில் பரவும் வன்முறை; 72 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

தென் ஆப்பிரிக்காவில் பரவும் வன்முறை; 72 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க், ஜூலை 16 தென் ஆப்பிரிக் காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்குநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஜேக்கப் ஜூமாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட் டனர். எனினும் கடந்த வாரம் ஜேக்கப் ஜூமா காவல்துறையில் சரணடைந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத் தனர்.

இந்நிலையில் ஜேக்கப் ஜூமாவை கைது செய்த தற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.‌ சாலைகளை மறித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக் காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என வன்முறைகளில் ஈடு பட்டு வருகின்றனர். கல வரம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வன்முறை பரவி வருகிறது.டர்பனில் உள்ள லென் மன்ட் மருத்துவமனையை கலவரக் காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இதையடுத்து அங்கி ருந்த நோயாளிகள், மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத் தில் கொள்ளையடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல் லப்பட்டனர். அப்போது நெருப்பில் சிக்கிய ஒரு பெண் தனது குழந்தையை கீழே நின்றவர்களிடம் தூக்கி வீசினார்.

இறுதியில் அந்த வணிக வளாகம் வன்முறையாளர் களால் தீக்கிரையாக்கப் பட்டது.

தொடர்ந்து வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் கட்டுப்படுத்த கலவரக் காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தென்னாப் பிரிக்காவில் கலவரம் பரவி வருவதால் 75 ஆயிரம் வீரர்கள் நாடு முழுவதும் களமிறக்கப் பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் பிரதான எதிர்க்கட்சி பயங் கரவாதிகள் அமைதி யின்மையைத் தூண்டுவ தாக குற்றம் சாட்டி உள் ளது.

தென் ஆப்பிரிக்காவின் வன்முறை-கலவரத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந் துள்ளனர்.

No comments:

Post a Comment