டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· ஆங்கிலம் பேசு திட்டத்தில் தெலங்கானா மாநில கிராமங்களில் 30,000 ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
· காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பு மன நிறைவாக உள்ளது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பூபேந்திர யாதவ், அனுபிரியா படேல், உறுப்பினர்கள் கணேஷ் சிங் உள்ளிட்டோர் பிரதமர் மோடியைச் சந்தித்து மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்ஜாதி வருமானம் குறைந்தோர்க்கு இட ஒதுக்கீடு அளித்திட கடிதம் தந்துள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் படிவத்தில், “ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தவரா” என்ற கேள்வி, பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 முதல் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஊகிக்க வழி வகுத்துள்ளது.
தி டெலிகிராப்:
· டில்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஒன்றிணைந்து பெகாசஸ் தொடர்பாக தொடர்ந்து போராட உள்ளதாக அறிவித்துள்ளன.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment