இந்தியாவில் 22 மாவட்டங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

இந்தியாவில் 22 மாவட்டங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை

புதுடில்லி, ஜூலை 28 இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,40,951 ஆக உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 4,21,382 ஆக உள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் குண மடைந்தோர் எண்ணிக்கை 3,06,21,469 ஆக இருக்கிறது. நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் மட்டுமே தினசரி கரோனா பாதிப்பு 100க்கும் மேல் உள்ளது. அதன்படி, கேரளா 7, மணிப்பூர் 5, மேகாலயா 3 ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பின் வார சராசரி தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், கடந்த வாரங்களில் குறைந்த விகிதத்தை ஒப்பிடும்போது சற்று மெதுவாகவே குறைந்து வருகின்றது.

இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.4% ஆக உயர்ந்துள்ளது என்று லால் அகர்வால் கூறினார்.

No comments:

Post a Comment