சென்னை, ஜூலை 15 பச்சைத் தமிழர் காமராசரின் 119ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2021) சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப் பட்டிருந்த படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர்
வீ. குமரேசன், திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக் குரைஞர் பா. மணியம்மை, அம் பேத்கர் இயக்க சிறீராமூலு, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர்
கி. இராமலிங்கம், வை. கலையரசன், உடுமலை வடிவேல், கார்ல்மார்க்ஸ், பவானி, மகேந்திரன், யுவராஜ், மகேஷ், பெரியார் இனியன், பெரியார் ஆதவன் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment