காஞ்சி மண்டல பெரியாரியல் பயிற்சி முகாம் தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 13, 2021

காஞ்சி மண்டல பெரியாரியல் பயிற்சி முகாம் தொடங்கியது

 காஞ்சிபுரம், ஜூன் 13  காஞ்சி மண்டல பெரியாரியல் பயிற்சி முகாம் காஞ்சி மண்டல  கழகத் தலைவர் பு.எல்லப்பன் தலைமையில் 11.6.2021 அன்று மாலை 5.30 மணியளவில் இணைய வழியில் நடைபெற்றது.

 செங்கற்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆசிரியர் .சிவக்குமார் அனைவரையும் வரவேற்று தம் இளவயது பெரியாரியல் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இயக்கப் பாடகர் இசைமாமணி முனைவர் திருத்தணி பன்னீர்செல்வம்  தந்தை பெரியார் குறித்தும் தமிழ் மாணவர்கள் குறித்தும் சிறப்பாகப்   பாடல்களைப்பாடி  முகாமை களைகட்டச் செய்தார்.

 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் பொறுப்பாளர் கவிஞர் பொதட்டூர் புவியரசன் அவர்கள் பயிற்சி முகாம் குறித்து அறிமுக உரையாற்றினார்.

 திராவிடர் கழகத்  துணைத் தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன்  தொடக்க உரையாற்றினார். அவர்தம் உரையில்,  தந்தை பெரியார்,  ஏன்? எதற்கு? என்ற பகுத்தறிவுக் கேள்விகளை தம்இளம் பருவத்திலிருந்தே கேட்ட விதங்களையும், அதனால் விளைந்த பயன்களையும் நயம்படக் குறிப்பிட்டார். மேலும்,  பெரியாரின் முக்கிய கொள்கைகள்  ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்புமே என்றும்  இவற்றின் தொடர்ச்சியே மற்ற அனைத்தும்   என்றும்  மாணவர்களுக்கு எளிய முறையில் விளங்கும் வகையில் குறிப்பிட்டார்.

 முன்னதாக மாநில கழக அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன்,   மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் பொறியாளர் செந்தூர்பாண்டியன், மாநில மகளிர் அணி அமைப்பாளர் .தேன்மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 காஞ்சிபுரம் மாவட்ட  தலைவர் டி..ஜி.  அசோகன், ராணிப்பேட்டை மாவட்ட  தலைவர் சு. லோகநாதன்,  திருவள்ளூர் மாவட்ட  தலைவர் . மோகனவேலு,  செங்கல்பட்டு மாவட்ட  தலைவர் பூ. சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

 காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் . ரவீந்திரன்,  ராணிபேட்டை மாவட்ட  செயலாளர் செ. கோபி,  திருவள்ளுவர் மாவட்ட  செயலாளர் கோ. கிருஷ்ணமூர்த்தி,  செங்கல்பட்டு கழக மாவட்ட  செயலாளர் . செம்பியன், காஞ்சி மண்டல இளைஞரணி செயலாளர் தீ. இளந்திரையன், காஞ்சி மண்டல மாணவர் கழக செயலாளர் .மோ. பகுத்தறிவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சி மண்டல பெரியாரியல் பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளரும் காஞ்சி மண்டல திராவிடர் கழகச் செயலாளருமான முனைவர் காஞ்சி கதிரவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இணைப்புரை வழங்கினார்.

 ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர்  சிவஜோதி,  திருவள்ளுவர் மாவட்ட  ஆசிரியர்கள் கவிஞர் எழில், .சீ.வீரமணி ஆகியோரும்  ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

காஞ்சி மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்களும் பயிற்சி மாணவர்களும் பங்கேற்று தொடக்க நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் அறிவுமணி லோகநாதன்  அனைவருக்கும் நன்றி கூறினார்.

இயக்கத் தோழர் யுவராஜ் கணினியில் அனைவரையும் இணைத்து நிகழ்ச்சி சிறக்க ஒத்துழைத்தார்.

No comments:

Post a Comment