வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, வங்கிக் கணக்குகள்பற்றிய தகவல்களைக் கூறினால், உங்கள் பணம் பறிபோகும் - சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் சத்தியநாராயணன் இந்த முறையில் ரூபாய் ஒரு லட்சத்தைப் பறிகொடுத்தார்.
‘ஆனந்தவிகடன்' ‘‘தமாஷ்!''
கரோனாவுக்குக் கோவில் கட்டுவதுவரை வந்து விட்ட நம்மாட்கள் அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்?
‘கரோனா வடிவில் பெண்கள் தாலி செய்து போட்டால் மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும்' என்று கிளப்பி விடுவார்கள்.
***
2019 கோடி செலவில் 219 அடி உயரத்தில் மத்திய அரசு கரோனாவுக்குச் சிலை வைத்தாலும் வைக்க லாம்!
- ‘ஆனந்தவிகடன்', 16.6.2021
ஒரே ஆண்டில்!
இந்தியாவில் கரோனா பாதிப்பால் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் பெற்றோரை இழந்த குழந்தைகள் 30 ஆயிரத்து 71.
இதுதான் இந்தியா!
உலகில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையில் 3 விழுக்காடு இந்தியாவில் உள்ளன. சாலை விபத்தோ உலகளவில் இந்தியாவில் 11 விழுக்காடு. மரணம் ஒன்றரை லட்சம்.
உயர்நீதிமன்றம் ஆணை
தமிழ்நாடு முதலமைச்சரின் வலியுறுத்தலின்படி விவசாயக் கடன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
14 லட்சம்
தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாத காரணத் தால் 14 லட்சம் பேர்மீது வழக்கு.
பாதிப்புக் குறைவு
பொது முடக்கத்தின் காரணமாக கடந்த 10 நாள் களில் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக் குறைவு 41 சதவிகிதம்.
இந்தியர்கள்தாம்
உலகில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளில் அதிக அளவு 53% இந்தியர்கள்தாம்.
2019 தேர்தல்
2019 மக்களவைத் தேர்தலில் செலவிடப்பட்ட தொகை ரூ.60 ஆயிரம் கோடி; கைப்பற்றப்பட்ட தொகையோ ரூ.3,500 கோடி.
தமிழக அரசு ஆணை
ஆக்சிஜன், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 விழுக் காடு படுக்கைகள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கிட தமிழக அரசு ஆணை.
No comments:
Post a Comment