ஆசிரியர் அய்யா அவர்களால் மட்டுமே முடியும்!
9.6.2021 அன்று வெளியான 'விடுதலை' ஏட்டில் முதல் பக்கத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரின் கவனத்திற்கு என்று ஒரு பெட்டிச் செய்தி. அதில் "கடந்த அதிமுக ஆட்சியில் பேருந்துகளில் திருவள்ளுவரின் அங்கீகரிக்கப்பட்ட படத்தையும், குறள் பாக்கள் எழுதியதையும் மாற்றி ஏதேதோ படங்கள் முதலியவை வைத்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டுகிறோம்" என்றார். சரியாக எட்டு மணி நேரத்தில் போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்துப் பேருந்துகளிலும் 12.06.2021க்குள் திருவள்ளு வரின் அங்கீகரிக்கப்பட்ட படத்துடன் குறள் பாக்கள் அமைய வேண்டும் என அனைத்து பணிமனைகளுக்கும் சுற்றறிக்கை வந்து விட்டது. தொமுச மற்றும் திராவிடர் தொழிலாளர் அமைப்பு முக்கியப் பொறுப்பாளர்கள் முக்கிய கவனம் செலுத்தி சீர்மையோடு செய்ய வேண்டும் என்பதால் இந்த தகவலை பரிமாறிக் கொள்கிறேன். ஆசிரியர் அய்யா அவர்கள் இடும் கட்டளையை நிறைவேற்றும் லட்சக்கணக்கான தோழர் களில் நானும் ஒருவன்,
சேத்துப்பட்டு அ. நாகராஜன்.
மேனாள் செய்யாறு மாவட்ட செயலாளர்,
நேரக் காப்பாளர்,
த. அ. போ. கழகம் (விழுப்புரம்) கோயம்பேடு.
No comments:
Post a Comment