7.6.2021
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· கரோனா தொற்றை எதிர்த்து போராடாமல், டிவிட்டரில் நீல டிக் இருக்கிறதா என்பது குறித்து மோடி அரசு போராடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
· வட கிழக்கு மாநில மக்களின் பண்பாடு, மொழி, வாழ்க்கை முறை குறித்து மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· 8ஆவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் ஆட்சி அலுவல் மொழியாக்கிட திமுக பாடுபடும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.
· கரோனா 2ஆம் அலை பெருந்தொற்று காலத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் வியத்தகு சாதனைகளை செய்துள்ளது அந்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
· தமிழ் நாட்டின் நிதி பற்றாக்குறையை சரி செய்வது, ஜி.டி.பி.அய் அதிகப்படுத்துவதும்தான் திமுக அரசின் முன்னுரிமை என தமிழ் நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் தெரிவித்தார்.
· நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment