ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 7, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

7.6.2021

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·  கரோனா தொற்றை எதிர்த்து போராடாமல், டிவிட்டரில் நீல டிக் இருக்கிறதா என்பது குறித்து மோடி அரசு போராடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

· வட கிழக்கு மாநில மக்களின் பண்பாடு, மொழி, வாழ்க்கை முறை குறித்து மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

 · 8ஆவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் ஆட்சி அலுவல் மொழியாக்கிட திமுக பாடுபடும் என தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலின் உறுதி.

· கரோனா 2ஆம் அலை பெருந்தொற்று காலத்தில்,  முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் வியத்தகு சாதனைகளை செய்துள்ளது அந்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

· தமிழ் நாட்டின் நிதி பற்றாக்குறையை சரி செய்வது, ஜி.டி.பி.அய் அதிகப்படுத்துவதும்தான் திமுக அரசின் முன்னுரிமை என தமிழ் நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் தெரிவித்தார்.

· நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

- குடந்தை கருணா  

No comments:

Post a Comment