பழைய
தஞ்சை மாவட்டத்தில் தலைசிறந்த கல்வி வள்ளல்களில் ஒருவர் பெருமதிப்பிற்குரிய மாண்பமை பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் (வயது 93).
சிறந்த
பண்பாளர் - ஒழுக்கசீலர் - நுண்மாநுழைபுலம் படைத்தவர். எவ ருக்கும் கருணை
உள்ளத்தோடு உத விடும் ஈகத்தின்
உறைவிடம். உயர்ந்த ஆங்கில இலக்கியப் புலமையாளரும் கூட.
எந்தவிதமான
அரசியல் சர்ச்சைகளிலும் தன்னை சிக்க வைத்துக் கொள்ளாமல், அவரது கொள்கைகளில் உறுதியாகப் பின்பற்றி நடந்தவர்.
நம்மிடத்தில்
மாறாத அன்புள்ளம் கொண்டு, அடிக்கடி நம் பணியை ஊக்கப்படுத்தத் தவறாத உத்தமர்.
நேர்மையுடன்
வாழ்ந்த தலைதாழாத ‘சுயமரியாதைக்காரர்' - சுயமரியாதை என்பது கட்சி முத்திரை அல்ல - பண்பின் வெளிப்பாடு.
"பெரியாருக்குப்
பின் இவ்வளவு இளைஞர்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி வருகிறீர்கள். பல கட்சிகளில் இளைஞர்கள்
கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் இருப்பதில்லை. ஆனால் திராவிடர் கழகத்தில் அவர்கள் இணைந்ததின் மூலம் உங்கள் தலைமையில் அவர்கள் நல்வழிப்படுத்தப்பட்டு வருகிறார்கள்" - பார்க்கும்போதெல்லாம் இவ்வாறு கூறி ஊக்கமும், உற்சாகமும் தருவார்கள்.
அப்படிப்பட்ட
குளிர்தரு, தரு நிழல், நிழல் கனி இன்று வரலாறாகி வாழத் துவங்கிவிட்டார்! - ஈடற்ற இழப்பு.
பெருமைமிகு
அவரது நட்புக்கு ஈடும் இணையும் ஏது?
அவரது
பிரிவு அக்குடும்பத்திற்கும், அவரது வாழ்க்கை துணைவியார் அம்மா அவர்களுக்கும், அவரது அருமைச் செல்வர் பூண்டி கிருஷ்ணசாமி (வாண்டையார்) அவர்களுக்கும், கல்விக் குடும்பத்திற்கும் எவ்வளவு இழப்போ அவ்வளவு இழப்பு நமக்கும். ஆழ்ந்த இரங்கல், ஆறுதல் அனைவருக்கும் தெரிவிக்கிறோம்.
அவருக்கு
நமது வீரவணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.5.2021
குறிப்பு:
இன்று காலை அவரது அருமை மகன் பூண்டி திரு.கிருஷ்ணசாமி அவர்களிடம் தொலைப்பேசியில் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தோம்.
No comments:
Post a Comment