தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்துகள்
மேலும் வலு சேர்க்கும்!
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!
13.5.2021 நாளிட்ட ‘விடுதலை' நாளிதழில் வெளியான ‘வாழ்வியல் சிந்தனைகள்' பகுதியில் ‘அதிகார வர்க்கத்தில் இப்படியும் ஓர் ஆளுமை அதிசயம்' கட்டுரை வாசித்தேன்,
அரசியல் வரலாற்றில் ராஜதந்திரி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் போன்று அவரது தனயன் தளபதியார் செயல்பாடுகள் வியக்கவைக்கிறது.
ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அரசு அதிகாரிகள் நியமனம் என்பதில் தமிழகம் புளகாங்கிதம் அடைந்தது என்றே கூறலாம்.
நேர்மைக்கு பெயர்பெற்ற அதிகாரி வெ. இறையன்பு அவர்களை தலைமைச் செயலாளராக நியமித்தது பாராட்டுக் குரியது. தற்பெருமையை விரும்பாத, கடமைச் செம்மலாக விளங்கும் இறையன்பு அவர்கள் பொருத்தமானவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தமிழ்நாடு சமூக நீதி, கல்வி, பொருளாதாரம், மருத்துவம் என அனைத்திலும் பெயர் விளங்க வேண்டும் என்பதில் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்களின் செயல்பாடு போற்றுதலுக்குரியது. அய்யா, அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் பயின்றது எப்போதும் வெல்லும். தளபதியார் அவர்களின் தொலைநோக்குபார்வை சிறக்க, வியக்க தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களின் கருத்துகள் மேலும் வலுசேர்க்கும் என்பதில் அய்யமில்லை.
அன்புள்ள கழகத்தொண்டன்,
மு. சு. அன்புமணி, மதுரை
No comments:
Post a Comment