காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்: தமிழகத்தில், ஈ.வெ.ரா, கொள்கையை ஒழிக்கவே, பா.ஜ., வந்திருக்கிறது என்று, பா.ஜ., - எம்.பி., ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். ‘சனாதன தர்மம்' என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர், ஈ.வெ.ரா., தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர். ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும், அ.தி.மு.க., அந்த, பா.ஜ.-எம்.பி.யின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை?
'டவுட்' தனபாலு: உங்களுக்கும், நீங்கள் வென்றதாக கூறும், ஈ.வெ.ரா., கோஷ்டிகளுக்கும் தான் வேறு வேலையில்லை; அ.தி.மு.க.,வுக்கு அப்படியில்லையே... எப்படியாவது. தமிழகத்தில் விஷ விதையை தூவி, நச்சு அறுவடை செய்ய வேண்டும் என துடிக்கும் உங்களைப் போன்றவர்களை, அ.தி.மு.க., இன்னமும் அறிந்திருக்காது என்ற, 'டவுட்' உங்களுக்கு இன்னமும் உள்ளதோ!
‘தினமலர்', 7.4.2021, பக்கம் 8
ஹிந்துராஷ்டிரம் அமைப்போம் என்பதும், கோமாதா என்று கூறி தாழ்த்தப்பட்டவர்களை அடித்துக் கொல்லுவதும், 450 ஆண்டுகால சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலமான அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததும், அதற்கு ஆதரவு கொடுத்ததும், விநாயகன் ஊர்வலம் என்று சிறுபான்மையினரின் நிறுவனங்களைத் தாக்குவதும் யார்?
‘தினமலர்' ஆர்.எஸ்.எஸ். கும்பல் பதில் சொல்லட்டும், பார்க்கலாம்!
No comments:
Post a Comment